Tuesday, June 2, 2009

வாழ்கை பற்றி ...! ....தொடர்கிறது பதிவு 01

உலக வாழ்வில் நாம் பல பல நிகழ்சிகளை பார்க்கிறோம் , பல்வேறு பட்ட மனிதர்களுடனான உறவுகள் கிடைகின்றன . வேறுபட்ட பிரதேசங்களிலோ அல்லது வேறுபட்ட நாட்டிலோ வாழுகிற சந்தர்பம் பெறுகிறோம். இவ்வாறாக பல வேறுபட்ட அனுபவங்களை பெறுகிற நாம், எதோ ஒரு நாளில் மகிழ்ச்சியான மறக்க முடியாத பொழுதுகளை பெறுகிறோம் அதே வேளை வேறொரு நாளில் தர்ம சங்கடமான நிலைமையோ சோகமான நிலையோ ஏற்படுவதும் உண்டு. பிறிதொரு நாளில் சந்தோசமோ கவலையோ அற்ற ஒரு வெறுமை உணர்வு கூட ஏற்படுவது உண்டு . இவை எல்லாவற்றுக்கும் ஒரே ஊடகம் மனம் ஒன்றுதான் . மனம் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம் .

அடுத்த பதிவில், கடவுள் பற்றிய கருத்துகளோடு சந்திகிறேன்

பற்றுதல் தொடரும் ......!
அதுவரை
நன்றிகளோடு.....!
நண்பன் - யுகன் -



வாழ்கை பற்றிய முகவுரை

முதலில் தமிழ் தாயை தலை வணங்கி உலக வாழ்வில் நான் கண்டவைகளை, நிஜ வாழ்வின் நிசப்தமான தத்துவங்களை, உலகின் யதார்த்தமான உண்மைகளை எழுத்துருவில் எடுத்துரைக்க விளைகின்றேன் .

அதற்கு முன்பதாக இவற்றை சொல்வதற்கு நீ யார் ? உனக்கு இருக்கும் தகுதி என்ன ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது ...! உண்மையில் நான் சொல்லவருவது ஒன்றும் ஆலோசனைகளோ அல்லது கட்டளைகளோ அல்ல , என் மனத்தில் உதிர்த்த கருத்துகளும், நான் கண்ட அனுபவங்களும். இவை ஆளுக்கு ஆள் வேறுபடலாம், ஆனாலும் ஒவ்வொரு பதிவின் பின்னணியிலும் உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் எதிபார்க்கிறேன்.

முரண்பாடான கருத்துக்களோ அல்லது கருத்து பிழைகளோ காணப்படின் அதை திருத்தி கொள்வதற்கு ஆவண செயும் படி தாழ்மையாக கேட்டு கொள்கிறேன்.

பற்றுதல் தொடரும் ......!
நன்றிகளோடு.....!
நண்பன் - யுகன் -