Wednesday, June 3, 2009

கடவுள் பற்றிய வாழ்கை பதிவு

கடவுள் என்ற சொல் பலருக்கும் கற்கண்டாய் இனித்தாலும் அதனை வெறும் கல்லாய் மட்டும் பார்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . கடவுள் யார் ? எங்கே இருக்கிறார் ? எப்படி காண்பது ? பலரும் பல சமய நெறிமுறைகள் இருந்தாலும் இவ்உலகில் இது இன்னமும் அவிழ்க்கப்படாத ஒரு முடிச்சு என்று தான் சொல்ல முடியும். கடவுள் என்று ஆரம்பிக்கிற எல்லா வாதங்களும் கடைசியில் எதோ ஒரு மத(சமய ) நெறிமுறைக்குள்சென்று மறைந்து விடுகின்றன.
மதம் அல்லது சமயம் என்பது எல்லாம் ஒரு மார்க்க வழியே அன்றி கடவுளை காணும் இடம் அல்ல. கடவுள் , மதம் என்பதை தெளிவு படுத்த முன் , உலகில் கண்டிக்க படவேண்டிய சிலர் இருக்கிறார்கள். தம்மை நாஸ்திகர் என்றும் கடவுள் என்று ஒருவர் இல்லை என்றும், எந்தவொரு செயலும் தம்மால் செய்ய முடியும் என்றும் வாதிடுகிறவர்கள் அவர்கள். உண்மையில் அவர்கள் முகமூடி அணிந்து நிலைக்கண்ணாடி முன்னாலே சென்று நிலை தடுமாருகிறவர்கள் அதாவது , தமக்கு நிகர் தாமே என்கிற முகமூடியை அணிந்துகொண்டு வாழ்கை என்கிற நிலைக்கண்ணாடி முன்னால் நிலை குலைந்து போகிறவர்கள்
கடவுளை மனக்கண்ணால் உணர இலகுவான வழிமுறைகளை கற்று தருவதே மதம் அல்லது மார்கத்தின் கடமை. எந்த ஒரு சமயமும் கடவுளை தன்னகத்தே கொண்டதில்லை. எவனொருவன் உலக மாயைகளை கடந்து தனது மனதை கட்டுபடுத்துகின்றானோ அவன் கடவுளை காண்பான் அவனுக்கு எந்த மத்தினதோ அல்லது மார்க்கதினதோ உதவி தேவை இல்லை.
மேலும் தொடரும் .....!
மீண்டும் சந்திக்கும் வரை ....!
நன்றிகளோடு நண்பன் - யுகன் -